பார்வையாளர்கள் எண்ணிக்கை

எமது வலைப்பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Search This Blog

Monday, March 4, 2024

10ஆம் வகுப்பு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு

 

வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரச் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், வத்திபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை நேரத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுடைய படிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக, தலைமை ஆசிரியர் திருமதி அ. மணிமேகலை அவர்களுடைய சீரிய முயற்சியால் ரெட்டியபட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குக் காலை நேரம் முழுவதும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.










Friday, February 9, 2024

ஆண்டு விழா 2023-2024 நிகழ்வுகள்






















https://vathipattighss.blogspot.com/2024/02/2023-2024.html

திண்டுக்கல் மாவட்டம் வத்திப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டுக்குரிய ஆண்டு விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு நத்தம் தெற்கு ஒன்றியச் செயலரும் ரெட்டியப்பட்டி ஊராட்சி, ஒன்றிய குழு உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. ரத்தினக்குமார் அவர்கள் முன்னிலை வகிக்க, ரெட்டியப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சாத்திபவுர் அவர்கள் தலைமை தாங்க தமிழ்க் கூடல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக  மதுரை சூரியன் பண்பலையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர், இணை தயாரிப்பாளர் திரு. ஸ்டீபன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.அ. மணிமேகலை அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் திருமதி.அமுதா அவர்கள் 2023-2024 கல்வி ஆண்டுக்குரிய ஆண்டு அறிக்கையை வாசித்தளித்தார்கள். பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியர் திரு. கோபிநாத் அவர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார்கள். பள்ளியின் மூத்த முதுகலை ஆசிரியர் திருமதி ஜெயலட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.